99
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்து ரொட்டியால் மோதல்! – இளைஞர் அடித்து கொலை

Share

காலி பத்தேகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் உணவக உரிமையாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தேகம, நாகொட பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்காக குறித்த இளைஞர் சென்றுள்ளார்.

அப்போது இளைஞருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த இளைஞர் வெளியே தனது வீடு சென்று கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார்.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த உணவக உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞரை உலக்கையால் அடித்து தாக்கியுள்ளது.

இதனால் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளரின் மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...