செய்திகள்இலங்கை

வடக்கில் 33 பேருக்கு தொற்று உறுதி!

Share
covid cells
Share

வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 267 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 6 பேர்,வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 3 பேர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும்,மன்னார் மாவட்ட மருத்துவமனையில் 2 பேரும்,
வவுனியா மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறை கடற்படை முகாமிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...