ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்தமை தொடர்பில், அக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் கடுமையாக திட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற உணவகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இளம் அமைச்சர் ஒருவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருமே ஜீவன்மீது சொற்கணை தொடுத்துள்ளனர். இதற்கு ஜீவன் தொண்டமானும் கடுந்தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.
#SriLankaNews