tamilni 258 scaled
இலங்கைசெய்திகள்

பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு

Share

பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு

இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு, கடந்த வருட நடுவர் பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தரம் 4 நடுவர் சந்தன கன்னங்கர இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளைக் கொண்ட நான்காம் தர நடுவர்களை தரம் 3 க்கு தரத்துக்கு உயர்த்துவதற்கான பரீட்சையை இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வருடம் நடத்தியது.

இதன்போது முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் நடுவர் மற்றும் இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழுவின் உறுப்பினர் ஆகிய இருவரும், பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பரீட்சைக்கு தோற்றிய நடுவர்களிடம் 60 கேள்விகள் அடங்கிய தாள் ஒன்றை கசியவிட்டதாக கன்னங்கரா குற்றம் சுமத்தியுள்ளார்.

கசிந்த தாளில் இருந்து 25 கேள்விகள் அதிகாரப்பூர்வ தேர்வில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பரீட்சையைத் தொடர்ந்து இருபத்தைந்து நடுவர்கள் பதவி உயர்வு பெற்றனர். இருப்பினும், இதில் 30க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 98 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இன்னும் சிலர் தகுதி பெறத் தவறியுள்ளனர். வினாத்தாள் கசிந்திருப்பது இது முதல் நிகழ்வு அல்ல. எனினும் முன்னர் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அணுகல் இருந்தது இந்ததடவை, குறைந்தபட்சம் 25 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு முன்னதாக வினாக்களைப் பெற்றுள்ளனர்.

வினாத்தாள் கசியாத நிலையில், முன்னணி நடுவரான குமார் தர்மசேன கூட 98 மதிப்பெண்களைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...