24 665f85d7033c3
இலங்கைசெய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்: மகிந்தானந்தவிற்கு எதிராக முறைப்பாடு

Share

தீவிர சிகிச்சை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்: மகிந்தானந்தவிற்கு எதிராக முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தனது தந்தையை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் (Gunathilaka Rajapaksha ) மகன் கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் எழுத்துப் பூர்வ முறைப்பாடும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது தந்தையை தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்துள்ளதாகவும் அதற்கு அறுவை சிகிச்சையில் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது தந்தை தற்போது கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தநிஹால் தள்துவ குறிப்பிடுகின்றார்.

மேலும், முறைப்பாட்டாளரான குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் சென்ற போதிலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் வாக்குமூலம் பெற முடியாமல் போனதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...