எரிபொருள் இறக்கும் பணி ஆரம்பம்!

ship

அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் சரக்கு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி 37,000 மெட்ரிக் தொன் 92 ஒக்ரெய்ன் பெற்றோல் சரக்கு மற்றும் ஒரு 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குகள் இன்று இறக்கும் பணி தொடங்கவுள்ளது.

அத்துடன் 2 நாட்களுக்கு முன் வந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்கு நாளை காலை இறக்கும் பணி நிறைவடைகிறது.

மேலும் ஒரு 40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்குக்கு டொலர் செலுத்தினால் இறக்கும் பணிக்காக விடுவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#srilankanews

Exit mobile version