parli 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Share

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று, இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே நேற்றைய தினமும் விவாதம் தொடர்ந்தது.

இவ் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்,

” படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூருவதற்காக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடக்கின்றது. எமது மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.” – எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கு மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் என சபாபீடத்திடம் முறையிட்டார்.

அப்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான பிரேமநாத் தொலவத்தவே சபைக்கு தலைமை தாங்கினார். இச் சம்பவம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...