colombo 1 e1652962832517
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பல்கலை மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

Share

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் கோட்டையில் உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

‘கோட்டா – ரணில் சூழ்ச்சி அரசை விரட்டியடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து காலிமுகத்திடல் நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.

இவர்கள் மருதானை, புறக்கோட்டை ஊடாக உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் ஊடாக காலிமுகத்திடல் பக்கம் செல்ல முயன்றனர்.

இதன்போது அங்கு வீதித் தடைகளை போட்டிருந்த பொலிஸார், மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தி மாணவர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர்.

எனினும், தொடர்ந்தும் மாணவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...