2 16
இலங்கைசெய்திகள்

வடக்கில் தமிழ் கட்சிகள் ஆதிக்கம்! பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி!

Share

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

எனினும், அவற்றில் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர, ஏனைய அனைத்திலும் பெரும்பான்மையை அக்கட்சி இழந்துள்ளது.

சமீபத்திய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது நாமல் ராஜபகச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனவும், திலித் ஜெயவீரவின் சர்வஜன பலயாவும் முன்னேற்றம் கண்டுள்ளன.

மேலும் வடக்கில் தமிழ் கட்சிகள் முன்னிலை தமக்கான ஆசனங்களை தக்கவைத்துள்ளன.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட நாமல் தலைமையிலான கட்சி மொத்த வாக்குகளில் 9 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றுள்ளது.

மேலும், இதுவரை அறிவிக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டை என அடைமொழியிடப்படும் கொழும்பு மாநகர சபையில் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சென்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தெரிவிக்கப்படுகிறது.

மேயர் பதவிக்கு பல முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் முன்னணி கட்சிகள் தேர்ந்தெடுத்த நிலையில் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சென்றுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாநகர சபைக்கு பலத்த போட்டி உருவாகிய நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டது.

21.8 சதவீத வாக்குகளைப் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...