3 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

Share

கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் (12) முதல் குறித்த தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் (Sri Lankan Railway Department) தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான முதலாவது தொடருந்து, செவ்வாய்க்கிழமை மாலை 4:15 இற்கு புறப்படும் எனத் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே (N.J. Indipolage) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேர அட்டவணையின்படி, குறித்த தொடருந்து இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு – யாழ்ப்பாணம் (Jaffna) இடையிலான தொடருந்து சேவை கடந்த 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அத்துடன் யாழ். காங்கேசன்துறைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையை கடந்த 2ம் திகதி முதல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...