கொழும்பு துறைமுக நகரம் டிசெம்பரில் மக்கள் பார்வைக்கு

553

தெற்காசியாவின் கேந்திரமாக திகழும் கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் மக்கள் பார்வைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் கேந்திரமாக திகழவுள்ள இந்த துறைமுக நகரம் கடலை நிரப்பி செயற்கையாக 269 ஹெக்ரேயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது சிறந்த வர்த்தக மத்திய கேந்திரமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இங்கு சீன துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் 99 வீதம் நிறைவடைந்துள்ளது எனவும் துறைமுக நகர இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version