11 3
இலங்கைசெய்திகள்

பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை

Share

பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கம்பஹா – கொழும்பு மற்றும் கொழும்பு – கண்டிக்கு இடையில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் என கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு சாரதிகளும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வீதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கிரில்லவல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகளையும் பொலிஸார் நிறுத்தி சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பொலிஸ் காவலில் எடுத்துக்கொண்டதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன கொடிகாரவின் பணிப்புரைக்கு அமைய, கடவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமார ஹெட்டியாராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...