ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

Share

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தை 2048ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொய் கனவு காண வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (02.07.2023) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்கள் தமது உடைமைகளை இழக்கின்றனர். இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

நாட்டின் பொருளாதார சிக்கலினால் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி பல்வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

இப்போது ஏனைய பகுதிகளையும் விற்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் அரசாங்கம் எதைப் பற்றி கனவு காண்கிறது? இதன் இலக்கு என்ன?

முத்துராஜவலை முழுவதையும் அழித்து, வெளியாட்களுக்கு விற்று, பணம் சம்பாதித்து, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாக வாழுகின்றார்கள்.

ஆனால், நாட்டு மக்களுக்கு எஞ்சியிருப்பது துன்பம் மட்டுமே. இதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது என பேராயர் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...