நாட்டைவிட்டு குடும்பத்துடன் தப்பியோடும் ராஜபக்சக்களின் சகாக்கள்!

IMG01 10

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், ராஜபக்ச ஆட்சியாளர்களின் சகாவாகக் கருதப்பட்டவருமா நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் மாலைதீவுக்குச் சென்றுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அவர் விமான நிலையத்துக்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கமராக்கள் கொண்ட கமரா அமைப்பு செயலிழந்தது எனக் கூறப்படுகின்றது.

இன்று காலை 8.20 மணியளவில் UL102 என்ற விமானத்தில் அவர் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கமரா அமைப்பின் கோளாறு குறித்து விமான நிலையத்தின் பாதுகாப்புப் படையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

#SriLankaNews

Exit mobile version