4 61
இலங்கைசெய்திகள்

குறைவடையப்போகும் தேங்காய் விலை: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

குறைவடையப்போகும் தேங்காய் விலை: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.

அதன்படி, தற்போது ரூ.250 அளவில் உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் ரூ.180 முதல் 200 வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த 200 மில்லியன் தேங்காய்களை தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் என்று மூன்று வகைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...