Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

முதுகில் ஏறி அரசியல் சவாரி! – 11 கட்சிகளின் கூட்டணி தொடர்பில் அவதானம் தேவை என்கிறார் ராஜித

Share

“11 கட்சிகளின் கூட்டணி எங்கள் முதுகில் அரசியல் சவாரி செய்ய முயல்கின்றது. அந்த பொறிக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலைமை மிக நிதானமாக கையாள வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ராஜித சேனாரத்ன.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. சஜித் பிரேமதாச உட்பட கட்சி பிரமுகர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நம்பிக்கையில்லாப் பிரேரணை, இடைக்கால அரசு யோசனை பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், இடைக்கால அரசுக்குள் சுயாதீன அணிகள் நுழைந்துவிடும். எனவே, காத்திருந்து காய்நகர்த்துவோம் என இதன்போது பிரேரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அங்கம் வகிக்கும் அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால், அது எதிர்கால அரசியலுக்கு சிக்கலா அமைந்துவிடும். எனவே, வெளியில் இருந்துகொண்டு தேவையான ஆதரவை – ஒத்துழைப்பை வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னரே, இடைக்கால அரசை நிராகரிக்கும் வகையில் சஜித் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுவருகின்றார்.

விமல், கம்மன்பில உள்ளிட்ட 11 கட்சிகளில் உள்ளவர்கள், எந்நேரத்திலும் காலை வாரலாம். அவர்கள் குறித்து விழிப்பாகவே இருக்க வேண்டும் என ராஜித சேனாரத்ன மேற்படி சந்திப்பின்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...