33 4
இலங்கைசெய்திகள்

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Share

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

லுணுகலை கல்லு குதத்தை ஏலத்தில் பெற வந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை நகரில் உள்ள கல்லு குதம் இன்றையதினம் ஏலத்தில் விடப்பட இருந்த நிலையில் குருணாகலை மற்றும் பதுளை பகுதியில் உள்ள இரண்டு குழுக்கள் குறித்த கல்லு குதத்தை ஏலத்தில் பெறுவதற்கு முற்பட்ட போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

அத்துடன் வாகனம் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி அடித்து சேதமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...