BANDU
இலங்கைசெய்திகள்

பந்துலவிடம் சி.ஐ.டி விசாரணை

Share

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது.

சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பந்துல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டன எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் தொடர்பில் முழுமையான ஆதாரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்க அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...