இலங்கைசெய்திகள்

இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share

இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

இலங்கை (sri lanka)வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் (china)பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான சீனப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் 318,000 மில்லிலீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சீன சந்தேக நபர் தாமரை கோபுர திட்டத்தில் பொறியியலாளராகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை அளுத்கடே இலக்கம் இரண்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...