இலங்கைசெய்திகள்

இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share
Share

இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

இலங்கை (sri lanka)வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் (china)பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான சீனப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் 318,000 மில்லிலீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சீன சந்தேக நபர் தாமரை கோபுர திட்டத்தில் பொறியியலாளராகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை அளுத்கடே இலக்கம் இரண்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...