25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

Share

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக் கூடாது என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், ஆசிய வல்லரசு பிராந்தியத்திற்கு சீனா அச்சுறுத்தல் என்றும் ஆசியாவின் அதிகார சமநிலையை மாற்ற இராணுவ நடவடிக்கைக்கு நம்பகத்தன்மையுடன் தயாராகி வருவதாகவும் தாய்வான் மீது படையெடுப்பதற்கான ஒத்திகைகளை சீனா முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விரைவாக கண்டனத்தை வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சு, சீனாவை கட்டுப்படுத்த தாய்வான் பிரச்சினையை ஒரு பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்தலாமென அமெரிக்கா மாயைகளை வளர்த்துக் கொள்ள எண்ணலாகாது.

அத்தோடு நெருப்புடன் விளையாடவும் கூடாது என்றுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அவதூறான குற்றச்சாட்டுகளால் சீனாவை இழிவுபடுத்தியுள்ளதாகவும் பனிப்போர் மனநிலையை ஊக்குவிப்பதாகவும் பீஜிங் குற்றம் சாட்டியுள்ளது.

தாய்வானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் ஒன்றிணைப்பதாகவும் சீனா கூறியுள்ளது

 

Share
தொடர்புடையது
MediaFile 2 2
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 611 ஆக உயர்வு: 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

vcvc 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் நிவாரண நிதி: பிரித்தானியா மனிதாபிமான உதவியை 1 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித்...

MediaFile 9
இலங்கைஉலகம்செய்திகள்

வெள்ள நிவாரணக் கொடுப்பனவு ரூ. 25,000: யாழ்ப்பாணத்தில் ஊழலுக்கு இடமில்லை – அரசாங்க அதிபர் பிரதீபன் உறுதி!

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற ரூ. 25,000 கொடுப்பனவு விநியோகத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான...

MediaFile 1 1
இலங்கைசெய்திகள்

கந்தப்பளை விவசாயப் பேரழிவு: வெள்ளத்தால் 100% பயிர்ச்சேதம் – உடனடி நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால்...