25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

Share

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பாக, கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

கொழும்பு மாநகர சபை மக்கள் திசைகாட்டியை நிராகரிக்கும் சூழ்நிலையில், திசைகாட்டியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் தேவையான ஆதரவை வழங்க விரும்புகிறோம்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...