இந்தியாவுடன் நெருக்கமாகும் ரணில்
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் நெருக்கமாகும் ரணில்

Share

இந்தியாவுடன் நெருக்கமாகும் ரணில்

சீனாவின் மற்றுமொரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் அக்டோபர் மாத இறுதியில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Shi Yan 6 என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலுக்கு இதுவரை இலங்கையின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கவலை வெளியிட்டு வரும் இந்தியா, இந்த விவகாரத்தை உச்ச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் பின்னணியில், இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய அபிலாஷைகள் குறித்து கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதியளித்ததன் பின்னணியில் இந்த கப்பல் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோது, ​​இந்தியா தீவிர கவலை தெரிவித்திருந்தது.

எப்படியிருப்பினும் Shi Yan 6 கப்பல் வரவுள்ளமை தொடர்பில் தமக்கு தெரியாது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறான கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர், அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாரா நிறுவனம், இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த கப்பலின் வருகை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாரா நிறுவன அதிகாரிகள், தங்கள் சொந்த ஆராய்ச்சிக்காக நீர் மாதிரிகளை எடுக்க கப்பலில் இணைவார்கள் என்று கூறியுள்ள நிலையில், இந்த ஆய்வு நடவடிக்கைகள் தெற்கு கடற்கரையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே இலங்கைக்கு வரவிருந்ததாகவும், அது பல முறை தாமதமாகியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இது இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புவதாக நாரா மேலும் கூறியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1749716262 image 42525c8345
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை...

ranil wickremesinghe 1540622362 tile 1652346881 1652542509 1658301653
செய்திகள்இலங்கை

இந்தியா பயணத்தின்போது: ரணில் விக்கிரமசிங்க தம்பதியினர் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்...

250925 AKD UNGA
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாத வலைக்குள் நாடு சிக்காது’: இலங்கை தினக் கொண்டாட்டம் மூலம் நல்லிணக்கம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும்...

archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...