இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சீனாவின் அறிவிப்பு

tamilni 115 scaled
Share

இலங்கை தொடர்பில் சீனாவின் அறிவிப்பு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான, எக்ஸிம் வங்கி, கடந்த மாதம் இலங்கையுடன் சீனா தொடர்பான கடன்களை அகற்றுவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீய்ஜிங்கில் வழக்கமான செய்தி மாநாட்டின் போது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதனை நேற்று அறிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பரின் பிற்பகுதியில், சீனா EXIM வங்கி, உத்தியோகபூர்வ கடன் கொடுனர் என்ற வகையில், கடன்களை அகற்றுவது தொடர்பாக இலங்கையுடன் பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார். எனினும் அது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்புக்கு EXIM வங்கியோ அல்லது இலங்கையின் நிதி அமைச்சகமோ உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை சீனாவின் EXIM க்கு $4.1 பில்லியன் அல்லது நாட்டின் வெளிநாட்டு நாணயக் கடனில் 11% கடன்பட்டுள்ளது.

இதேவேளை நட்பான அண்டை நாடாகவும், நேர்மையான நண்பராகவும், சீனா, அதன் திறன்களுக்குள் உதவிகளை வழங்கி வருகிறது” என்று வாங் நேற்றைய செய்தி மாநாட்டில் கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...