tamilni 115 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சீனாவின் அறிவிப்பு

Share

இலங்கை தொடர்பில் சீனாவின் அறிவிப்பு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான, எக்ஸிம் வங்கி, கடந்த மாதம் இலங்கையுடன் சீனா தொடர்பான கடன்களை அகற்றுவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீய்ஜிங்கில் வழக்கமான செய்தி மாநாட்டின் போது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதனை நேற்று அறிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பரின் பிற்பகுதியில், சீனா EXIM வங்கி, உத்தியோகபூர்வ கடன் கொடுனர் என்ற வகையில், கடன்களை அகற்றுவது தொடர்பாக இலங்கையுடன் பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார். எனினும் அது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்புக்கு EXIM வங்கியோ அல்லது இலங்கையின் நிதி அமைச்சகமோ உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை சீனாவின் EXIM க்கு $4.1 பில்லியன் அல்லது நாட்டின் வெளிநாட்டு நாணயக் கடனில் 11% கடன்பட்டுள்ளது.

இதேவேளை நட்பான அண்டை நாடாகவும், நேர்மையான நண்பராகவும், சீனா, அதன் திறன்களுக்குள் உதவிகளை வழங்கி வருகிறது” என்று வாங் நேற்றைய செய்தி மாநாட்டில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...