tamilni 320 scaled
இலங்கைசெய்திகள்

பாலியல் சம்பவங்கள்! இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Share

பாலியல் சம்பவங்கள்! இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவாகியுள்ள சிறுவர் வன்புணர்வு சம்பவங்களில், பாதியளவான சம்பங்கள், போதைப்பொருள் பாவனையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பரில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன முன்னதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவர்களில் பதினைந்து பேர் அதே வயதுடையவர்களுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமாகியுள்ளனர் என்றும் ஏழு பேர் பலாத்காரம் காரணமாக கர்ப்பமாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், முறையான தந்தைமார் இல்லாத 22 குழந்தைகள் இந்த உலகத்திற்கு வாழ்வதில் பாரிய சிக்கல் நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் போதைக்கு அடிமையானவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...