13
இலங்கைசெய்திகள்

செம்மணி தடயப்பொருட்களை பார்வையிட மக்களுக்கு அழைப்பு.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

Share

யாழ். சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் பொழுது மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் சான்றுபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த சான்றுபொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதன் பிரகாரம், சான்றுபொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றமானது அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025.08.05ஆம் திகதி 13:30 மணிமுதல் 17:00 மணிவரை, மேற்படி உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவற்றைப் பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....