கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்வதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிடுகின்றார் என நேர்முகத் தேர்விற்கு வந்தவர்கள் குற்றம்சாட்டியதை தொடர்ந்தே இவ்வாறு குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(08.08.2023) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உரிய விதத்தில் தெரிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் நியமிப்பதற்காக பல சுற்று நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 25 பெண் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 25 பெண்களுக்கு பதிலாக ஆண்கள் அதாவது 125 ஆண்களும் 25 பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அமைச்சரின் தலையீடே காரணம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையால் நேற்று விமான நிலைய பகுதியில் குழப்பமான நிலை காணப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...