tamilni 363 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 பொய்! மீண்டும் சர்ச்சை நிலை

Share

சனல் 4 பொய்! மீண்டும் சர்ச்சை நிலை

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட அனைத்தும் பொய்யா என நாம் கேட்க விரும்புகின்றோம் என்று பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜனர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் பெரிதாக கூச்சலிட்டனர்.

இறுதியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கும் மொட்டு கட்சியினர் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் ராஜபக்சவினர் செய்த செயலே இது என நிரூபிப்பதற்கு பலர் முயற்சி செய்தனர்.

எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து எம்மீது சேறு பூசுவதற்கு பாரியளவில் முயற்சி செய்தனர்.

சலேவுடனோ, அல்லது இது தொடர்பிலோ எவ்வித தொடர்பும் இல்லையென சனல் 4 நிறுவனத்தின் பணிப்பாளரும், நிறைவேற்று பணிப்பாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே இதுவும் பொய்யா என நாம் வினவுகின்றோம்.

அனைத்தையும் அங்கும் இங்கும் தாக்கி ராஜபக்சர்களை தாக்குவதற்கே முயற்சிக்கின்றனர். ராஜபக்சர்களின் மூலமே நாம் இன்று சுவாசிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...