senthil thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்

இ.தொ.காவின் தலைவராகின்றார் செந்தில் தொண்டமான்!

Share

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு போட்டி எதுவும் நிலவாது எனவும், செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நாளை (30) கூடவுள்ளது. இதன்போது புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு ஆரம்பத்தில் இருமுனைப் போட்டி நிலவிவந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால், அப்பதவிக்கு போட்டியிடுவதில்லை என மற்றைய தரப்பு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது பதவிகளுக்கான உறுப்பினர் தேர்வு சம்பந்தமான பட்டியலில் இறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...