24 66102467677aa
இலங்கைசெய்திகள்

சொகுசு வாகனங்கள் கடத்தல்: 500 கோடி ரூபா வரி இழப்பு

Share

வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமான ஐம்பத்தொரு சொகுசு வாகனங்களின் பதிவை மாற்றும் நடவடிக்கையை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (05) மோட்டார் போக்குவரத்து திணைக்கள (Department of Motor Traffic – Narahenpita) ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்கள் சுங்கத்தினுள் கடத்தப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட 51 வழக்குகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்கள் மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி அமைப்பில் பொய்யான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளது.

ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சமந்தப்பெரும, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கும் போது மேலும் தெரிவிக்கையில்,

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் 2015ஆம் ஆண்டு முதல் 178 சொகுசு வாகனங்கள் இலங்கைக்குள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வாகனங்களை இரகசியமாக பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுங்கத்தினுள் கடத்தப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஏழு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சொகுசு வாகனங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கடத்தப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளை அழித்து பொய்யான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்டு 2005 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பொய்யான தகவல்கள் பதிவில் இடம்பெற்றுள்ளன.

சொகுசு வாகனங்களின் தற்போதைய பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் தோராயமான மதிப்பீட்டில் ஐம்பத்தொரு வழக்குகளைத் தாக்கல் செய்த பின்னர் ஆணையம் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட வாகனங்களை வேறு தரப்பினருக்கு மாற்றுவதைத் தடுக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...