35 7
இலங்கைசெய்திகள்

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள கர்தினால்

Share

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள கர்தினால்

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ( Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களின் செயற்பாடுகளில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

நீதிமன்ற சுதந்திரத்தின் அடிப்படையில், நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கும் முழு சுதந்திரம் நீதிபதிகளுக்கு உள்ளது.

எனவே, ஒரு நீதிபதி ஒரு வழக்கை நடத்துவது அல்லது முடிவெடுப்பதில் எந்த வெளியாரும், அரசாங்கமோ அல்லது வேறுவிதமாகவோ தலையிடவோ அல்லது குறுக்கிட முயற்சிக்கவோ கூடாது என்று கர்தினால் ரஞ்சித் அறிக்கை ஒன்றில் கேட்டுள்ளார்.

அண்மையில், தங்களுக்கு பாதகமான சில தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளை விமர்சித்து, அரசு வெளியிட்ட அறிக்கைகள் தம்மை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் முழுமையான சுதந்திரம் என்பது அரசியலமைப்பின் மூலக்கல்லாகும், இது நிறைவேற்று அதிகாரம் அல்லது பிற அரசு நிறுவனங்களின் அத்துமீறலுக்கு எதிராக ஒரு அரணாக செயல்படுகிறது.

எனவே மக்கள் பாதுகாப்பின் கடைசி கோட்டையாக விளங்கும் நீதித்துறையை தாக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருவதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...