a4980444 cdfe 436f 87bf 8d81dc688aa2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் பல்கலையில் மூலதனச்சந்தை புதிர் போட்டி!

Share
“பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மூலதனச் சந்தை தொடர்பான அறிவினைப் பெருக்குவதன் மூலம் முதலீட்டு நடவடிக்கைகளில் தேர்ச்சி பெறுதலும் எதிர்காலத்தை வடிவமைத்தலும்”  என்ற தொனிப்பொருளுடன் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் என்பன இணைந்து நடாத்தும் மூலதனச்சந்தை புதிர் போட்டி  ஆனது யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீட கலையரங்கில்  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலே ஒவ்வொரு அணியிலும் 4 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் 7 பீடங்களைச் சேர்ந்த 19 அணிகள் பங்குபங்றுகின்றன. இப் புதிர்ப் போட்டிக்கான சகல ஆயத்தங்களும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட  பீடாதிபதி பேராசிரியர் பா . நிமலதாசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கிடையிலான பங்குச் சந்தை தொடர்பான அறிவாற்றலை மேம்படுத்தி முதலீட்டினை ஊக்குவித்து இலங்கைப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு எதிர்கால பங்குச் சந்தை முதலீடுகளை தூண்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இப்புதிர் போட்டியானது இரண்டு கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
முதலாவது கட்டம் பீடங்களுக்கு இடையேயான போட்டிகளாகவும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டம் பல்கலைக்கழகங்களுக்கு இடையோயான போட்டிகளாகவும் காணப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏழு சுற்றுக்கள் காணப்படுவதுடன், இப் புதிர்ப் போட்டியானது உலக சந்தை பொது அறிவு இலங்கைப் பொருளாதாரம் மற்றும் வணிகம நடப்பு விவகாரங்கள் விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்குகள் போன்ற எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்.
பீடங்களுக்கிடையேயான போட்டியில் உயர்ந்த புள்ளிகளைப் பெறும் முதல் மூன்று அணிகள் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்கும். பீடங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியானது பணப் பரிசாக ரூபா 75,000 இனை பெறுவதுடன் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியானது பணப் பரிசாக ரூபா 300,000 இனை பெறுவதுடன் முதலாவது 2ஆம் நிலை அணியும் இரண்டாவது 2ஆம் நிலை அணியும் முறையே ரூபா 200,000 மற்றும் ரூபா 100,000 இனை பரிசாகப் பெற்றுக்கொள்ளும்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...