1666873785 1666871892 DOLLER l
இலங்கைசெய்திகள்

நாணயமாற்று அனுமதி இரத்து

Share

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரசன்ன மணி எக்ஸ்சேன்ஜ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நாணய மாற்று அனுமதிப்பத்திரத்தை நிரந்தரமாக இரத்து செய்ய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் செய்த விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3)ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, கொழும்பு 01 மற்றும் வெள்ளவத்தையில் இயங்கிய தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்ன மணி எக்சேன்ஜ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கம்பனி மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநரொருவராக பிரசன்ன மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், நாணய மாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என வங்கி அறிவித்துள்ளது.

பிரசன்ன மணி எக்சேன்ஜ் நிறுவனத்துடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனைசெய்தல் மற்றும் பரிமாற்றம்செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...