Mayilvaganam uthayakumar
இலங்கைஅரசியல்செய்திகள்

கோதுமை மாவினால் பிரச்சினையைத் தீர்க்கமுடியுமா?

Share

கோதுமை மாவில் விலையை குறைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியும் என இந்த அரசாங்கம் நினைத்தால் இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம் வேறு ஏதும் கிடையாது.

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் கோதுமை மா குறைந்த விலையில் வழங்கப்படும் என அரசாங்கம் விடுத்த அறிவிப்பு பெருந்தோட்ட மக்களை அவமதிப்பதாக அமைந்துள்ளதென அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் இதனை தனியார் ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு உரிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ள நிலையில் தனியார் ஊழியர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏன் ஐயாயிரம் ரூபா வழங்க முடியாது?

மானிய விலையில் 15 கிலோ கோதுமை மா வழங்கினால், அதன் பெருமதி வெறும் 500 ரூபா மாத்திரமே.

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபாவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபாவும் வழங்கும் இந்த அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன? ஏன் இந்த பாகுபாடு?

இந்த அரசாங்கத்தினால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கவனிக்கப்படுகின்றனர்.

வெட்கமின்றி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் கோதுமை மா விலை குறைக்கப்பட்டதை வரவேற்றுள்ளனர். கோதுமை மா திட்டத்தை இராஜாங்க அமைச்சர் தனது அமைச்சின் கீழ் செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளார். வீடு கட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள குறித்த அமைச்சின் பெயரைக் கோதுமை மா விநியோக அமைச்சு என்று மாற்றினால் அதுவே சாலப் பொருத்தமானதாக இருக்கும்.

காரணம் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட அமைச்சில் வீடுகள் கட்டப்படுவதில்லை. அதனால் கோதுமை மா வினியோகிக்கும் நிலைக்கு இந்த ராஜாங்க அமைச்சு தள்ளப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டும் போது அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான நிவாரணங்கள் வழங்கப்படுவதை ஒருநாளும் ஏற்று கொள்ள முடியாது.

அரசாங்கத்தின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க மாட்டார்கள்.

அரசாங்கத்தின் அழிவு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவின் பதவி நீக்கத்துடன் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளக பிரச்சினை காரணமாக மேலும் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவர்.

அதனுடாக நாட்டுக்கு பாதகமாக இருக்கும் இந்த அரசாங்கம் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...