24 6654229b4af99
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு அழைப்பு

Share

ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தலைமையிலான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கையின் (Sri Lanka) ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தின் நடுப்பகுதிக்கு முன்னதாக அனைத்து Cசெயற்பாடுகளையும் பூர்த்தி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் கடந்த ஆண்டின் இறுதியில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக மாகாண மட்டங்களிலான அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடி, தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஆளுநர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது பொது மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...