tamilni 404 scaled
இலங்கைசெய்திகள்

சினோபெக் நிறுவனத்தின் முன்மொழிவு

Share

சினோபெக் நிறுவனத்தின் முன்மொழிவு

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது திங்கட்கிழமைக்கான அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட குறித்த நிறுவனம் அழைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சினோபெக்கின் இந்த முதலீட்டு முனைப்பு, சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் தமது வர்த்தம் விரிவடைவதற்கான நீண்ட முயற்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

ஏற்கனவே சினோபெக், சவூதி அரேபியாவில் சுத்திகரிப்பு சொத்துக்களையும் ரஷ்யாவில் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தியையும் கொண்டுள்ளது.

இது பீஜிங்கின் லட்சியமான பட்டுப்பாதை முன்முயற்சியுடன் பொருந்துகிறது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, சுத்திகரிப்பு மற்றும் தொழில்நுட்ப அளவை இறுதி செய்வது உட்பட அடிப்படை பொறியியல் வடிவமைப்பை சினோபெக் ஆரம்பிக்கும் என்று சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக 150 பெட்ரோல் நிலையங்களை நடத்துவதற்கான உரிமத்துடன், இலங்கையில் கால் பதித்துள்ள மூன்றாவது சர்வதேச நிறுவனமான, சினோபெக் அண்மையில் எரிபொருள் சில்லறை வர்த்தகத்தில் இணைந்துக்கொண்டது.

சீனாவின் இந்த சுத்திகரிப்பு நிலையம் இலங்கைக்கு அப்பால் உள்ள உள்ளூர் எரிபொருள் நுகர்வு குறைவாக உள்ள சந்தைகளை குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...