24 665ea42bcb780
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

Share

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் முற்றாக பாதிப்படைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இது தொடர்பான யோசனையை நேற்று (03) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், எந்தவொரு சுற்றறிக்கையையும் நம்பாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நாளைய தினம் நடைபெறவுள்ள உலக சுற்றாடல் தினத்திற்கான தேசிய கொண்டாட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர (Janaka Wakkumbura) மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...