திலீபனுக்கு சுடரேற்றல்! – கஜேந்திரன் எம்.பி. கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் சுடரேற்ற முற்பட்ட வேளை, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் நினைவேந்தலை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
திலீபன் நினைவுத் தூபியை சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நினைவேந்தலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அவரை பொலிஸார் கைதும் செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது அவர் நீதிமன்ற தடை உத்தரவு இல்லாமல் இறந்தவர்களை நினைவுகூரும் எமது உரிமையை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் இந்தப் பொலிஸ் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment