Dayasiri Jayasekara
அரசியல்இலங்கைசெய்திகள்

பற்றி எரிகிறது நாடு! உங்களுக்கு சமஷ்டி கேட்கிறதா? – சபையில் சீறிய தயாசிறி!

Share

பற்றி எரிகிறது நாடு! உங்களுக்கு சமஷ்டி கேட்கிறதா? – சபையில் சீறிய தயாசிறி!

” நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்தே போராடுகின்றனர். இப்படியான நெருக்கடியான சூழ்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமஷ்டி கோருகின்றார். இதில் என்ன நியாயம் உள்ளது, இந்நிலைமைக்கு உங்கள் அப்பாயும் பொறுப்பு கூறவேண்டும்.”

இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர,

” கோ ஹேம் கோட்டா என கூறுவதால் பிரச்சினை தீராது, நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு இருக்கின்றது. எனவெ, மக்கள் எதற்கு வீதியில் இறங்கியுள்ளனர், அது பற்றி கவனம் செலுத்தி தீர்வை தேட வேண்டும்.

நாட்டை வங்குரோதது அடைய விடமுடியாது. சமஷ்டி தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசுகின்றார். சமஷ்டி கோரியா வடக்கு மக்கள் தற்போது போராடுகின்றனர்?

எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, .பொருட்களின் விலை அதிகரம், இவற்றுக்கு எதிராகவே வடக்கு தமிழ் மக்கள் போராடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....