Dayasiri Jayasekara
அரசியல்இலங்கைசெய்திகள்

பற்றி எரிகிறது நாடு! உங்களுக்கு சமஷ்டி கேட்கிறதா? – சபையில் சீறிய தயாசிறி!

Share

பற்றி எரிகிறது நாடு! உங்களுக்கு சமஷ்டி கேட்கிறதா? – சபையில் சீறிய தயாசிறி!

” நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்தே போராடுகின்றனர். இப்படியான நெருக்கடியான சூழ்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமஷ்டி கோருகின்றார். இதில் என்ன நியாயம் உள்ளது, இந்நிலைமைக்கு உங்கள் அப்பாயும் பொறுப்பு கூறவேண்டும்.”

இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர,

” கோ ஹேம் கோட்டா என கூறுவதால் பிரச்சினை தீராது, நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு இருக்கின்றது. எனவெ, மக்கள் எதற்கு வீதியில் இறங்கியுள்ளனர், அது பற்றி கவனம் செலுத்தி தீர்வை தேட வேண்டும்.

நாட்டை வங்குரோதது அடைய விடமுடியாது. சமஷ்டி தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசுகின்றார். சமஷ்டி கோரியா வடக்கு மக்கள் தற்போது போராடுகின்றனர்?

எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, .பொருட்களின் விலை அதிகரம், இவற்றுக்கு எதிராகவே வடக்கு தமிழ் மக்கள் போராடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...