இலங்கைசெய்திகள்

காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்

Share
24 66143b5c49b70
Share

காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்

போர் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இலங்கை தற்போது ரமழான் நோன்பை அனுஷ்டிக்கின்ற போதும் காசா பகுதியில் மிகவும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் சுமார் முப்பத்தைந்து உயிர்களை இழந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு தேசிய ரம்ஜான் பண்டிகையை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து அந்த பணத்தை காசா முஸ்லிம் மக்களுக்கு வழங்கினோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசின் அழிவை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...