9 33
இலங்கைசெய்திகள்

அநுரவின் தேர்தல் கால வாக்குறுதிகள்! கேள்வி எழுப்பும் மகிந்த தரப்பு

Share

அநுரவின் தேர்தல் கால வாக்குறுதிகள்! கேள்வி எழுப்பும் மகிந்த தரப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவ்வாறான நிலைமையில் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சுபீட்சமான காலப் பகுதியென்றால் அது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைத்தான் கூறமுடியும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை யாரும் மறந்துவிட முடியாது. வரவு – செலவுத் திட்டத்தில் எம்மால் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் நாம் நிறைவேற்றினோம்.

ஆனால், அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அவ்வாறான நிலைமையில் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த முடியும்? அவை வெறும் ஏட்டில் மாத்திரமே காணப்படுகின்றன.

மக்களை ஏமாற்றி போலியான வாக்குறுதிகளை வழங்கினார்கள். தற்போது அவ்வாறான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதனை மக்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...