Arrested 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் கைது!

Share

அலுபோமுல்ல சாந்தி மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இயங்கி வருவதாக கூறப்படும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பாணத்துறை சாலிடு’ என்பவரின் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் பொதிகளை பொதி செய்யும் நிலையமாக குறித்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு கிலோ போதைப்பொருளை பொதி செய்வதற்கு 250,000 ரூபாவை “பானதுறை சாலிடு” என்ற போதைப்பொருள் கடத்தக்காரர் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 25, 30 வயதுகளையுடையவர்கள் என்பதுடன், அலுபோமுல்ல, சாந்தி மாவத்தை, ஆரஞ்சு கோட்டை பகுதியில் வசிப்பவர்களாவர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....