இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் கைது!

Share
Arrested 2
Share

அலுபோமுல்ல சாந்தி மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இயங்கி வருவதாக கூறப்படும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பாணத்துறை சாலிடு’ என்பவரின் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் பொதிகளை பொதி செய்யும் நிலையமாக குறித்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு கிலோ போதைப்பொருளை பொதி செய்வதற்கு 250,000 ரூபாவை “பானதுறை சாலிடு” என்ற போதைப்பொருள் கடத்தக்காரர் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 25, 30 வயதுகளையுடையவர்கள் என்பதுடன், அலுபோமுல்ல, சாந்தி மாவத்தை, ஆரஞ்சு கோட்டை பகுதியில் வசிப்பவர்களாவர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...