Arrested 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் கைது!

Share

அலுபோமுல்ல சாந்தி மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இயங்கி வருவதாக கூறப்படும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பாணத்துறை சாலிடு’ என்பவரின் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் பொதிகளை பொதி செய்யும் நிலையமாக குறித்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு கிலோ போதைப்பொருளை பொதி செய்வதற்கு 250,000 ரூபாவை “பானதுறை சாலிடு” என்ற போதைப்பொருள் கடத்தக்காரர் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 25, 30 வயதுகளையுடையவர்கள் என்பதுடன், அலுபோமுல்ல, சாந்தி மாவத்தை, ஆரஞ்சு கோட்டை பகுதியில் வசிப்பவர்களாவர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...