24 66497b5897c5a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசியல்வாதிகள்

Share

இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசியல்வாதிகள்

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவு நாளில் பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.

இலங்கைத் தீவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பிரித்தானிய கவனம் செலுத்தி வருவதோடு “தங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமாக நினைவுகூர” அனுமதிக்கும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை பிரித்தானியா ஆதரிப்பதாக வெளியுறவு செயலாளர் டேவிட் கேமருன் (David Cameron) குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 2013இல் இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது அங்கு உண்மை, நீதி மற்றும் அனைவருக்கும் பொறுப்புக்கூறலை பிரித்தானியா ஆதரிக்கும் என்று தாம் உறுதியளித்ததாக கேமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழர்களுக்கான நீதியை உறுதி செய்வதில் இங்கிலாந்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் டிஜிட்டல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறையின் பிரதி அரச செயலாளர் தங்கம் டெப்போனயர் (Thangam Debbonaire) கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

இத்துடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றவும் அது தவறிவிட்டது என்றும் தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...