24 66497b5897c5a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசியல்வாதிகள்

Share

இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசியல்வாதிகள்

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவு நாளில் பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.

இலங்கைத் தீவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பிரித்தானிய கவனம் செலுத்தி வருவதோடு “தங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமாக நினைவுகூர” அனுமதிக்கும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை பிரித்தானியா ஆதரிப்பதாக வெளியுறவு செயலாளர் டேவிட் கேமருன் (David Cameron) குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 2013இல் இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது அங்கு உண்மை, நீதி மற்றும் அனைவருக்கும் பொறுப்புக்கூறலை பிரித்தானியா ஆதரிக்கும் என்று தாம் உறுதியளித்ததாக கேமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழர்களுக்கான நீதியை உறுதி செய்வதில் இங்கிலாந்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் டிஜிட்டல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறையின் பிரதி அரச செயலாளர் தங்கம் டெப்போனயர் (Thangam Debbonaire) கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

இத்துடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றவும் அது தவறிவிட்டது என்றும் தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...