8 37
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் தொகையாக இது கருதப்படுகிறது, இதன் பெறுமதி 43,646,800 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பு சேவை அதிகாரியாக கடமையாற்றி வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இன்று காலை 09.35 மணியளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் கீரின் செனல் வாயில் வழியாக வெளியேற முயன்றுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான நடத்தை காரணமாக சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டு இரண்டு பைகளில் 43 கிலோகிராம் 648 கிராம் குஷ் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...