8 37
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் தொகையாக இது கருதப்படுகிறது, இதன் பெறுமதி 43,646,800 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பு சேவை அதிகாரியாக கடமையாற்றி வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இன்று காலை 09.35 மணியளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் கீரின் செனல் வாயில் வழியாக வெளியேற முயன்றுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான நடத்தை காரணமாக சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டு இரண்டு பைகளில் 43 கிலோகிராம் 648 கிராம் குஷ் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...