image 08b6f4275d
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் பிரிட்டன் விசேட திட்டம்!

Share

இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஆடை மற்றும் உணவு போன்ற நூற்றுக்கணக்கான பொருட்களுக்கான வரி குறைப்புகளை நீட்டிக்க பிரிட்டன் புதிய வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஜிஎஸ்பி வரி நிவாரண முறைக்கு பதிலாக இந்த புதிய திட்டம் 2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (DCTS) இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலமும் நன்மை பயக்கும் என்று நாட்டிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

80% க்கும் அதிகமான பொருட்களுக்கான வரியில்லா ஏற்றுமதியில் இருந்து இலங்கை தொடர்ந்து பயனடையும் என்றும் மேலும் 150 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மீதான வரிகளை நீக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நேரங்களில் விதிக்கப்படும் வரிகளை எளிமையாக்குவதுடன், பிரிட்டனுக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு கூடுதல் மற்றும் எளிமையான அணுகலை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...