கோட்டாபயவிடம் வாக்குமூலம்..!
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிடம் வாக்குமூலம்..!

Share

கோட்டாபயவிடம் வாக்குமூலம்..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி கோட்டாபயவிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்து கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி 17.85 மில்லியன் ரூபா பணம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களினால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் புரவெசி பலய என்ற அமைப்பு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்த வர்த்தகர்களினால் வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் சேதமாக்கப்பட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட காரணத்தினால் யார் எவ்வளவு தொகை பங்களிப்பு செய்தனர் என்பது பற்றிய விபரங்கள் தொலைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...