இராணுவம், பொலிஸ் திணைக்களத்தின் வாகனங்களை எமக்கு வழங்கினால் பாண், முட்டையை குறைந்த விலைக்கு நாடுமுழுவதிலும் விநியோகிக்க முடியுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இராணுவம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வாகனங்களை எமக்கு வழங்கினால் 49 ரூபாக்கு பாணையும், முட்டையை 55 ரூபாக்கு குறைவான விலையிலும் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews

