உழவு இயந்திரத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது – 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதியில் காணப்படும் காணி உழவு இயந்திரத்தால் பண்படுத்தபட்டுள்ளது. அதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி காணி உரிமையாளரின் மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தியுள்ளார்.

Tractor

இந்தநிலையில், சிறுவர்களில் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளான்.

சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னாடியே உயிரிழந்து விட்டான் என
வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version