செய்திகள்இலங்கைபிராந்தியம்

உழவு இயந்திரத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

Share
Tractor
Share

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது – 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதியில் காணப்படும் காணி உழவு இயந்திரத்தால் பண்படுத்தபட்டுள்ளது. அதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி காணி உரிமையாளரின் மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தியுள்ளார்.

Tractor

இந்தநிலையில், சிறுவர்களில் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளான்.

சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னாடியே உயிரிழந்து விட்டான் என
வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...