யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டியை சேர்ந்த மயூரன் மகிந்தன்(வயது -8) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளான்.
சிறுவன் மூச்சு பேச்சு இல்லாததை அவதானித்த சிறுவர்கள் சிறுவனின் தாயாரிடம் தெரிவித்தனர்
சிறுவனை உடனடியாக , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கொண்டு சென்ற போதிலும் , சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment