sucide 1 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு கல்லடியில் பரபரப்பு: தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

Share

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை (02) காலை இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி ஜீவி (GV) தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வர்த்தக நிலையங்கள் நிறைந்த பகுதியில், உயரமான ஓரிடத்தில் சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அக்கரைப்பற்று, சமுர்த்தி வீதியைச் சேர்ந்த முகுந்தன் சந்தோஷ் (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் (SOCO) பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் பல வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கல்லடிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் திரண்டுள்ளதுடன் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...